×

பழநி அருங்காட்சியகத்தில் தமிழக கோட்டைகள் புகைப்பட கண்காட்சி

பழநி, டிச. : பழநி அரசு அருங்காட்சியகத்தில் தமிழக கோட்டைகள் குறித்த புகைப்பட கண்காட்சி 27ம் தேதி வரை நடக்கிறது. சுதந்திர இந்தியாவின் 75வது ஆண்டை சிறப்பிக்கும் வகையில் பழநி அரசு அருங்காட்சியகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் உள்ள முக்கிய கோட்டைகளின் புகைப்படங்கள் தற்போது பழநி அரசு அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.  தமிழகத்தில் உள்ள கோட்டைகள் குறித்தும், அதன் வரலாற்றை மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் இக்கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இக்கண்காட்சி வரும் 27ம் தேதி வரை நடத்தப்படுமென பழநி அரசு அருங்காட்சிய காப்பாட்சியர் குணசேகரன் தெரிவித்துள்ளார். இக்கண்காட்சியினை பள்ளி மற்றும் கல்லூரிகளின் மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் பார்வையிட்டு வருகின்றனர்.

Tags : Tamilnadu Forts ,Photo Exhibition ,Palani Museum ,
× RELATED நாகப்பட்டினம் மாவட்டம் வளர்ச்சி பெற...