கோவை, டிச. 11: கோவை, ஈரோடு மாவட்ட திராவிட பஞ்சாலை தொழிலாளர் முன்னேற்ற சங்க 2021-2022 மற்றும் 2022-2023 ஆகிய ஆண்டுகளுக்கான தலைமை சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு அதன் அலுவலகத்தில் நடந்தது. இதில், தலைவராக தியாகராஜன், துணை தலைவர்களாக சரவணகுமார், சண்முகசுந்தரம், சுப்பிரமணியன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். பொதுச்செயலாளராக துரைசாமி, துணை பொதுச்செயலாளராக பழனிசாமி, செயலாளர்களாக கோவிந்தசாமி, பழனிசாமி, காளியப்பன், ஈஸ்வரன், பொருளாளராக சீனிவாசன், சட்ட ஆலோசகராக சூரி.நந்தகோபால் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர். மேலும், செயற்குழு உறுப்பினர்களாக தங்கராஜ், முத்துக்கருப்பன், பொன்ராஜ், செந்தில்குமார், சிவலிங்கமூர்த்தி, சுகுணன், முருகேசன், ஏ.சாமிநாதன், சந்திரசேகர், வேலுசாமி, சி.சாமிநாதன், சக்திவேல், லோகநாதன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.