×

முப்படை தளபதி பிபின் ராவத் மறைவு பள்ளி மாணவிகள் மௌன அஞ்சலி

ஈரோடு,டிச.11: முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா மற்றும் 12 ராணுவ வீரர்கள் சென்ற ஹெலிகாப்டர் குன்னூர் அருகே விபத்துக்குள்ளானது. இதில், தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் 11 ராணுவ வீரர்கள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து முப்படை தலைமைத் தளபதி மற்றும் ராணுவ வீரர்களின் மறைவுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஈரோடு பன்னீர் செல்வம் பூங்கா அருகில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமையாசிரியர் சுகந்தி, ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்று 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தினர்.

Tags : 3rd ,Brigade ,Commander ,Pipin Rawat ,
× RELATED நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து...