×

சிஐடியூ சார்பில் நடந்தது ஒரத்தநாடு அருகே ஆடு திருடிய 2 வாலிபர்கள் கைது

ஒரத்தநாடு,டிச.11: ஒரத்தநாடு அருகே உள்ள வாட்டாத்தி கோட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சித்திரவேல் (47). இவர் தனக்கு சொந்தமான நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகளை மந்தையில் அடைத்து வைத்துள்ளார். அப்போது இரண்டு வாலிபர்கள் இருசக்கர வாகனத்தில் இரண்டு ஆடுகளை திருடிக் கொண்டு சென்றுள்ளனர். ஆடுகள் கத்தும் சத்தத்தைக் கேட்டு ரோட்டில் சென்றவர்கள் உடனடியாக ஆட்டின் உரிமையாளர் வேலுக்கு தகவல் கொடுத்தனர். சித்திரவேல் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு இருசக்கர வாகனத்தில் விரைந்து வந்தனர். இருசக்கர வாகனத்தில் ஆட்டை திருடி சென்று கொண்டிருந்த மர்ம நபர்களை போலீசார் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர் பின்னர் வாட்டாத்திக் கோட்டை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பேராவூரணி அடுத்து உள்ள செங்கமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த முனியாண்டி (23), பட்டுக்கோட்டை அருகே உள்ள சூரப்பள்ளத்தை சேர்ந்த கணேசன் (24) என தெரியவந்தது. அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு கைது செய்தனர்.

Tags : CITU ,Orathanadu ,
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி