×

தஞ்சையில் மினி லாரியில் மணல் கடத்திய 2 பேர் கைது

தஞ்சை,டிச.11: தஞ்சை வடக்கு வாசலில் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை வழிமறித்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அனுமதியின்றி மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. தொடர்ந்து லாரியை ஓட்டி வந்தவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் நடுக்காவேரி, அரசமரத் தெருவை சேர்ந்த சத்தியமூர்த்தியின் மகன் மனுநீதி சோழன் (23), ராஜேந்திர ஆற்காட்டை சேர்ந்த ரங்கராஜ் மகன் ரகுபதி (21) என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் சந்திரா வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தார்.

Tags : Thanjavur ,
× RELATED வாக்கு பதிவான இயந்திரங்கள் பூட்டி...