×

(வேலூர்) ஆட்டோ கவிழ்ந்து மூதாட்டி பலி குடியாத்தம் அருகே

குடியாத்தம், டிச.10: குடியாத்தம் அருகே ஆட்டோ கவிழ்ந்து மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.கே.வி.குப்பம் அடுத்த மேல்விழாச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரம். இவரது மனைவி வசந்தா(70) இவர் நேற்று ஆந்திர மாநிலம், விருப்பாட்சிபுரத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக தனது மகள் லதாவுடன் சென்றார். பின்னர், அங்கு சிகிச்சை முடிந்து ஆட்டோவில் மேல்விழாச்சூருக்கு வந்து கொண்டிருந்தார்.

குடியாத்தம் அடுத்த ஏர்ரகுட்டலு பகுதியில் உள்ள வளைவில் திரும்பியபோது, திடீரென ஆட்டோ நிலை தடுமாறி தலை கிழாக கவிழ்ந்தது. அதில் வசந்தா தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், ஆட்டோவில் இருந்த டிரைவர் மற்றும் லதா சிறு காயங்களுடன் காயங்களுடன் உயிர் தப்பினார். இதுகுறித்து தகவல் அறிந்த குடியாத்தம் தாலுகா போலீசார், சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Vallur ,Dhabitat ,
× RELATED மீஞ்சூர் அருகே சாலையை சீரமைக்க கோரி மக்கள் மறியல் போராட்டம்..!!