×

குண்டாசில் 2 பேர் கைது

திருச்சி, டிச.10: சொத்து தகராறில் முன்விரோதம் காரணமாக கடந்த சில ஆண்டுக்கு முன் அதிமுக பொன்மலை பகுதி செயலாளர் சேகர் என்பவர் கொல்லப்பட்டார். இந்த கொலைக்கு பழிக்குப்பழியாக கடந்த சில மாதங்களுக்கு முன் சிலம்பரசன்(25) என்பவரை இளவரசன், கிருபாகரன் உள்பட 5 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்தனர். இதில் இளவரசன் உள்பட 5 பேரை அரியமங்கலம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் ரேஷன் கடையில் வாலிபரிடம் தகராறு செய்து கத்தியால் குத்திய கிருபாகரனை பாலக்கரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து சிறையில் உள்ள இளவரசன், கிருபாகரன் ஆகிய இருவரும் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதால் இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிடக்கோரி அரியமங்கலம் மற்றும் பாலக்கரை போலீசார் பரிந்துரைத்தனர். இதனை ஏற்ற மாநகர கமிஷனர் கார்த்திகேயன், நேற்று சிறையில் உள்ள இளவரசன், கிருபாகரன் ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து சிறையில் உள்ள இருவரிடமும் பாலக்கரை, அரியமங்கலம் போலீசார் அதற்கான நகலை வழங்கினர்.

Tags : Kundas ,
× RELATED குண்டாஸ் முடிந்து வெளியே வந்த ஒரு...