×

சாயர்புரம் பள்ளியில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஏரல், டிச. 10:  சாயர்புரம் தூய மார்டீன் தொடக்கப் பள்ளியில் தமிழக அரசின் இல்லம் தேடி வரும் கல்வி திட்டம் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு செந்தமிழ் முத்துராமலிங்கம் கலைக்குழு மற்றும் வைகுண்டம் வட்டார ஆசிரியர் பயிற்றுனர்கள் அனிதா மற்றும் விஜயகுமார் தலைமை வகித்தனர். இதில் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் மரிய லீகலா செய்திருந்தார்.

Tags : Sayarpuram School ,
× RELATED சாயர்புரம் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா