புதுக்கோட்டை, டிச.10: குன்னூர் அருகே மலைப்பகுதியில் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட மேலும் 13 பேர் பலியானார்கள். இதற்கு நாடு முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை காங்கிரஸ் கட்சியின் சார்பில் அண்ணா சிலை அருகில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் வடக்கு மாவட்ட தலைவர் முருகேசன், முன்னாள் நகர்மன்ற தலைவர் துரை.திவ்யநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.