×

புதுகை பேருந்து நிலையத்தில் துணிகரம் பஸ் ஏறிய பெண்ணிடம் 11 பவுன் நகை திருட்டு

புதுக்கோட்டை, டிச. 10: சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் லோகாம்பாள்(57). இவர் புதுக்கோட்டை மாவட்டம் நச்சாத்துபட்டியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக சேலத்தில் இருந்து புதுக்கோட்டைக்கு வந்துள்ளார். புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து நச்சாந்துப்பட்டிக்கு செல்ல நகர பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது மர்ம நபர்கள் இவரது பேக்கில் இருந்த 11 பவுன் நகையை திருடி சென்று விட்டனர். இது குறித்து லோகாம்பாள் அளித்த புகாரின்பேரில் புதுக்கோட்டை நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags : Budugai ,
× RELATED புதுகை திலகர் திடலில் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்