×

தாந்தோணிமலையில் சாலையோரம் சாக்கடை வடிகால் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

கரூர், டிச. 10: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபாதையுடன் கூடிய சாக்கடை வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதே போல் தாந்தோணிமலை பிரதான கடைவீதியோரமும் நடைபாதையுடன் கூடிய வடிகால் அமைக்கும் பணி சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக சாலையோரம் பள்ளம் தோண்டப்பட்டு பின்னர் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடைகளின் முன்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், வர்த்தக நிறுவனத்தினர்களும், பொதுமக்களும் எளிதாக கடைகளுக்கு செல்ல முடியாத நிலை நிலவி வருகிறது. எனவே இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அனைவரும் கோரிக்கை வைத்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பணிகளை பார்வையிட்டு விரைவாக முடிக்க தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Thanthonimalai ,
× RELATED தாந்தோணிமலை அரசு குடியிருப்பு பகுதியில் இடிந்த நிலையில் நாடக மேடை