கரூர், டிச. 10: கரூர் வெண்ணெய்மலையை சேர்ந்த 15 வயது சிறுமி கரூரில் உள்ள பள்ளியில் 10ம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மனுவில் கரூர் ஐந்து ரோடு பகுதியை சேர்ந்த கவுதம் (20) என்பவர் தன்னிடம் பாலியல் முயற்சி மேற்கொள்வதாக கூறியிருந்தார். அதன்பேரில் கரூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து, அந்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.