×

எறையூர், பென்னலூர் ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம்

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் எறையூர் மற்றும்  பென்னலூர் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் எறையூர் ஊராட்சியில், ஊரக வளர்ச்சித் துறை சார்பில் சிறப்பு கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் சசிரேகா சரவணன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் முனியம்மா லட்சுமி வரவேற்றார்.

ஒன்றிய கவுன்சிலர் பரமசிவன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி, ஊராட்சி செயலர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சாலை சீரமைப்பு, மழைநீர் வடிகால்வாய், தெருவிளக்கு, மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட வளர்ச்சி பணிகள் குறித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள், ஏராளமான கிராம பொதுமக்கள் கலந்துகொண்டனர். இதேபோல், பென்னலூர் ஊராட்சிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.




Tags : Grama Niladhari ,Eraiyur ,Pennalur ,
× RELATED எறையூர் சிப்காட்டில் மண் திருடி சாலை அமைப்பு: பொதுமக்கள் புகார்