×

சிவகளையில் பேவர் பிளாக் சாலை பணி ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ துவக்கிவைத்தார்

ஏரல், டிச. 9:  சிவகளையில் புதிதாக பேவர் பிளாக் ரோடு அமைக்கும் பணியை ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ துவக்கிவைத்தார். ஏரல் அருகே சிவகளை சோரநாத விநாயகர் கோயில் பகுதி மற்றும் நாடார் தெருவில் பேவர் பிளாக் ரோடு அமைப்பதற்கான துவக்க விழா நடந்தது. சிவகளை பஞ்சாயத்து தலைவர் பிரதிபா மதிவாணன் தலைமை வகித்தார். தெற்கு மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிச்சையா முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ, புதிதாக பேவர் பிளாக் ரோடு அமைக்கும் பணியைத் துவக்கிவைத்தார். பின்னர் அவர், விபத்தில் உயிரிழந்த சிவகளை மெயின்ரோடு ஜெசிலி ஞானத்தாய் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறியதோடு நிதியுதவி வழங்கினார். மேலும் விபத்தில் காயமடைந்த பிள்ளைமார் தெருவைச் சேர்ந்த செல்வம் என்பவரை அவவது வீட்டிற்கு சென்று நேரில் சந்தித்து ஆறுதல்கூறி நிதியுதவி வழங்கினார்.  நிகழ்ச்சிகளில் திமுக விவசாய அணி மாவட்ட  துணை அமைப்பாளர் மதிவாணன், ஆசிரியர் மாணிக்கம், தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் சங்கர், பொதுச்செயலாளர் அலங்காரம், செயலாளர் சந்தனகுமார், ஸ்ரீவை. மேற்கு வட்டாரத் தலைவர் நல்லகண்ணு, நகரப் பொறுப்பாளர் கருப்பசாமி, யூனியன் கவுன்சிலர் பாரத், இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜெயசீலன் துரை, சாயர்புரம் நகரத்தலைவர் ஜேக்கப், வக்கீல் பாலசுப்பிரமணியன், சாலை ஒப்பந்தக்காரர் ராஜா உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags : Paver Black Road mission procession ,Siwagalai ,
× RELATED திருச்சி மத்திய சிறை நுழைவாயிலில் ரூ1.09...