×

தைப்பூச இருமுடி விழாவை முன்னிட்டு செவ்வாடை பக்தர்கள் சக்தி மாலை அணிந்து விரதம் துவங்கினர்

தூத்துக்குடி, டிச.9: தைப்பூச இருமுடி விழாவை முன்னிட்டு மேல்மருவத்தூருக்கு செல்லும் தூத்துக்குடி மாவட்ட செவ்வாடை பக்தர்கள் சக்தி மாலை அணிந்து விரதத்தை துவக்கினர். மேல்மருவத்தூர் ஆன்மிககுருவின் அருளாசியுடன் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் தைப்பூச இருமுடி விழா டிச.13ம்தேதி தொடங்கி ஜனவரி 17ம்தேதி வரை நடைபெறுகிறது. இதில் பங்கேற்க ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றங்கள், சக்தி பீடங்களில் இருந்து செவ்வாடை பக்தர்கள் சக்தி மாலை அணிந்து விரதமிருந்து இருமுடி கட்டிச்செல்லும் நிகழ்ச்சி தொடங்கியது. சக்தி மாலை அணியும் நிகழ்ச்சியை தூத்துக்குடி மாவட்ட ஆன்மிக இயக்க தலைவர் சக்திமுருகன் துவக்கி வைத்தார். தூத்துக்குடி, வைகுண்டம், திருச்செந்தூர், உடன்குடி, ஓட்டப்பிடாரம், கடம்பூர், கோவில்பட்டி, மந்திதோப்பு, விளாத்திகுளம், நாகலாபுரம், புதூர், முத்துசாமிபுரம், எட்டயபுரம், கழுகுமலை, பிள்ளையார்நத்தம் உட்பட மாவட்டம் முழுவதும் தொடங்கியது. சக்தி மாலை இருமுடிகட்டிச் செல்லவிரும்பும் பக்தர்கள் தங்களுக்கு அருகிலுள்ள ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றங்கள், சக்தி பீடங்களை தொடர்பு கொள்ளலாம். அதிவேக ரயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்ல தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. நிகழ்ச்சியில், ஆன்மிக இயக்க துணைத்தலைவர் பண்டாரமுருகன், செயலாளர் செந்தில் சுப்பிரமணியன், பொருளாளர் கண்ணன், மகளிரணி பத்மாவதி, வேள்விக்குழு கிருஷ்ணநீலா, இளைஞரணி செல்லத்துரை, தணிக்கை குழு வேலு, பிரசாரம் முத்தையா உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags : Mars ,Thaipusam Irumudi festival ,
× RELATED செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறத்தில்...