×

மானூர் பஸ்சில் மாணவர்கள் மோதல்: ஒருவர் காயம்


மானூர், டிச. 9:  மானூரில் பஸ்சில் மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் குறித்து  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மானூர் அருகே எட்டாங்குளத்தை சேர்ந்தவர் இசக்கிபாண்டி (18). இவர் பேட்டை ஐடிஐயில் படித்து வருகிறார். நெல்லை டவுனில் இருந்து மானூர் செல்லும் அரசு பஸ்சில் இவர் ஏறியபோது, கூட்டம் இருந்ததால் படியில் தொங்கியபடி சென்றுள்ளார். அப்போது அதே பஸ்சில் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு பயணித்த பள்ளி மாணவர்கள் செல்வமுருகன், சந்தோஷ் உள்ளிட்ட மாணவர்களுக்கும், இவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் இசக்கிபாண்டி தாக்கப்பட்டு காயம் அடைந்தார். சிகிச்சைக்காக அவர் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இசக்கி பாண்டியை தாக்கியது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Manur Basel ,
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...