×

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ அதிகாரிகளுக்கு மஞ்சூரில் திமுகவினர் அஞ்சலி

மஞ்சூர், டிச.9:  கோவை சூலுார் விமானப்படை தளத்தில் இருந்து குன்னுார் வெலிங்டன் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் குன்னுார் அருகே விபத்தில் சிக்கியதில் முப்படை தளபதி பிபின் ராவத் உள்பட ராணுவ அதிகாரிகள் பலியாகினர்.இச்சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ அதிகாரிகளுக்கு திமுக சார்பில் மௌன அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மஞ்சூர் பஜாரில் நடத்தப்பட்டது. கீழ்குந்தா பேரூர் கழக செயலாளர் பாபு தலைமை தாங்கினார். தெற்கு ஒன்றிய செயலாளர் பரமசிவம், ஆதிதிராவிடர் நலக்குழு முன்னாள் துணை அமைப்பாளர் சின்னான், மாவட்ட பிரதிநிதி மாடக்கன்னு, காந்திபுரம் சங்கர், ராதாகிருஷ்ணன், ராஜசேகர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார்கள். ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ அதிகாரிகளுக்கு இரங்கல் தெரிவித்து இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் மகாலிங்கம், கரியமலை செயலாளர் சத்தியநாராயணன், குந்தா ஊராட்சி திமுக செயலாளர் சத்தியநாதன், பாலகொலா ஊராட்சி செயலாளர் ஈஸ்வரன், முஸ்தபா, திமுக இளைஞரணி நிர்வாகிகள் சிவக்குமார், ராஜ்குமார், சண்முகம், லுாயிஸ், ராஜ்குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.

Tags : DMK ,Manzoor ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...