×

இன்ஸ்பெக்டர் வசந்திக்கு எதிரான நடவடிக்கைக்கு தடை

மதுரை, டிச. 9: இன்ஸ்பெக்டர் வசந்திக்கு எதிரான நடவடிக்கைக்கு ஐகோர்ட் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது. வியாபாரியிடம் பணம் பறித்த வழக்கில் நாகமலை புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் வசந்தி கைதானார். இதனால், அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுப்பதற்காக விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். வழக்கில் இதுவரை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாததால், துறைரீதியான நடவடிக்கையை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு தடை கோரியும் வசந்தி, ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி, துறைரீதியான நடவடிக்கை தொடர்பான விசாரணை அதிகாரி நியமனத்திற்கு தடை விதித்தார். மேலும் மனுவிற்கு போலீசார் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.

Tags : Inspector ,Vasanthi ,
× RELATED காவலர்கள், அரசு அலுவலர்கள் அஞ்சல் வாக்குப்பதிவு: அதிகாரிகள் ஆய்வு