×

குண்டாசில் கைது

திண்டுக்கல், டிச.9: ஒட்டன்சத்திரம் வீரசின்னம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் நந்தகுமார்(22). இவர் வழிப்பறி கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டு பழநி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார். இவரது குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்பி சீனிவாசன் பரிந்துரைத்தார். இதன் பேரில் கலெக்டர் விசாகன் உத்தரவை தொடர்ந்து நந்தகுமாரை மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags : Kundas ,
× RELATED குண்டாஸில் வாலிபர் கைது