×

ஆவடி பேருந்து நிலையத்தில் மாணவிகள் குடுமிப்பிடி சண்டை: வீடியோ வைரல்

சென்னை: ஆவடியில் உள்ள ஒரு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். ஆவடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மாணவிகள், மாநகர பஸ், ரயில் மற்றும் சைக்கிள்களில் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். வழக்கம்போல் நேற்று மாலை பள்ளி முடிந்ததும் மாணவிகள் வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர். சில மாணவிகள், தங்கள் பகுதிக்கு செல்வதற்காக ஆவடி பஸ் நிலையத்துக்கு வந்து பஸ்சுக்காக காத்திருந்தனர்.
அப்போது மாணவிகள் திடீரென இரண்டு பிரிவுகளாக பிரிந்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒருவரையொருவர் தலைமுடியை பிடித்து இழுத்து சண்டையிட்டனர். அப்போது ஒரு மாணவியின் தலைமுடியை பிடித்து கீழே இழுத்துப்போட்டு சில மாணவிகள் அவரை கால்களால் மிதித்தனர். இதை பார்த்ததும் பஸ் நிலையத்தில் இருந்த பொதுமக்கள் ஓடிவந்து, அந்த மாணவியை பத்திரமாக மீட்டு தகராறை விலக்கிவிட்டனர்.    மேலும் அவர்களிடமும்  கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த ரோந்து பணியில் இருந்த ஆவடி போலீசார் மாணவிகளை பிடித்து அறிவுரை கூறி அனுப்பிவைத்தனர். மாணவிகள் மோதிக்கொண்ட வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி பரவியது.

Tags : Avadi ,
× RELATED பரோட்டா சாப்பிட்ட தொழிலாளி மூச்சு திணறி பரிதாப சாவு: ஆவடி அருகே சோகம்