×

தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல அனுமதியில்லை ஒட்டன்சத்திரம் நகராட்சி அறிவிப்பு

ஒட்டன்சத்திரம், டிச. 8: ஒட்டன்சத்திரம் நகராட்சி ஆணையாளர் தேவிகா விடுத்துள்ள அறிக்கை: ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதியில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் நியாய விலைக்கடைகள், பொது நிறுவனங்கள், சூப்பர் மார்க்கெட், காய்கனி மார்க்கெட், திரையரங்கம், வங்கிகள், திருமண மண்டபங்கள், பள்ளிகள், கல்லூரிகள், விளையாட்டு மைதானங்கள், பொது போக்குவரத்து, டீ கடைகள், ஜவுளி கடைகள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், தங்கும் விடுதிகள், ஹோட்டல்கள், பெட்ரோல் நிலையங்கள், கடைவீதிகள் உள்ளிட்ட பொது இடங்களில் செல்வதற்கு அனுமதி இல்லை. மேற்குறிப்பிட்ட விதிமுறைகளை பின்பற்றாத பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள் மீது பொது சுகாதார சட்டம் 1939 பிரிவு உட்பிரிவு 1ன் படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags : Ottansathram Municipality ,
× RELATED ஆழியாறு அணையிலிருந்து,...