×

கடலூர் மாவட்டத்தில் அம்பேத்கர் நினைவு தினம்

கடலூர், டிச. 7:  கடலூரில் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு திமுக சார்பில் ஐயப்பன் எம்எல்ஏ தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. முன்னாள் எம்எல்ஏ புகழேந்தி, நகர செயலாளர் ராஜா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைச்செல்வன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. அதிமுக சார்பில் நிர்வாகிகள் மாலை அணிவித்தனர். நிர்வாகிகள் சேவல்குமார், தங்கமணி, கந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மதிமுக சார்பில் மாவட்டசெயலாளர் ராமலிங்கம் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. நகர செயலாளர் ஐயப்பன், வெங்கட் நாராயணன், சேகர், பந்தர் குமார் கலந்து கொண்டனர்.

 நெல்லிக்குப்பம் சாலையில் உள்ள கோண்டூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பாலாஜி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. துணைத்தலைவர் சாந்தி பழனிவேல், கவுன்சிலர் சுபாஷினி சீனு மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்திய குடியரசு கட்சி சார்பில் மாவட்ட நிர்வாகி பால வீரவேல் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. விருத்தாசலம்: விருத்தாசலத்தில் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு பாலக்கரையில் உள்ள அவரது சிலைக்கு திமுக சார்பில் நகர செயலாளர் தண்டபாணி தலைமையில் மாவட்ட ஆதிதிராவிட நலக்குழு அமைப்பாளர் ராமு, மாவட்ட துணை செயலாளர் அரங்க பாலகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் குரு சரஸ்வதி முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் நம்பிராஜன், அன்பழகன், பொன் கணேஷ்,  வெங்கடேசன், இளங்கோவன், தளபதி குமார், பக்கிரிசாமி, ரவிச்சந்திரன், பரந்தாமன், ரமேஷ்சிங், முருகன், தளபதி, ராஜா உள்ளிட்ட திமுகவினர் கலந்து கொண்டனர். விடுதலை சிறுத்தைகள் சார்பில் நகர செயலாளர் முருகன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் அய்யாயிரம், நீதிவள்ளல், திருஞானம், எழில், மருதையன், அருள், தென்றல், அய்யாதுரை, வீரமணி, இளங்கோவன், பழனிச்சாமி உள்ளிட்ட விசிக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். விருத்தாசலம் தேமுதிக நகர கழகம் சார்பில் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு தேமுதிக விருத்தாசலம் நகர செயலாளர் ரமேஷ் தலைமையில், நகர அவைத்தலைவர் ராஜ்குமார் மாலை அணிவித்து மரியாதை செய்தார். உடன் மாவட்ட பிரதிநிதி கர்ணா, நகர துணை செயலாளர் பாலமுருகன், இளங்கோவன், நகர இளைஞரணி செயலாளர் மகேஷ், துணை செயலாளர் மலர் செந்தில், நகர நிர்வாகி சக்கரபாணி, நகர கேப்டன் மன்றம் மாணிக்கவாசகம், வட்ட செயலாளர் கிட்டாமணி, ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் எம்.ஜி.ஆர் என்கிற எழில்குமார் மற்றும் முன்னாள் நகர செயலாளர் சங்கர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

வேப்பூர்: அம்பேத்கரின் நினைவு நாளை முன்னிட்டு நல்லூர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் பாவாடை கோவிந்தசாமி தலைமையில் சேப்பாக்கத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கீழக்குறிச்சியில் திமுக ஒன்றிய இளைஞரணி சார்பில் இளைஞரணி அமைப்பாளர் தங்க நாராயணசாமி தலைமையில் அம்பேத்கர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட கவுன்சிலர் சக்திவினாயகம் தலைமையில் நல்லூரில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பண்ருட்டி: பண்ருட்டி அருகே அண்ணா கிராமத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு அண்ணா கிராமம் திமுக ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பண்ருட்டியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்ட தலைவர் சுரேந்தர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நகர செயலாளர் செந்தில் மணி, தலைவர் ஜெகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நெய்வேலி: நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா ராஜேந்திரன் நெய்வேலி புதுக்குப்பம் ரவுண்டானாவில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் நெய்வேலி நகர பொறுப்புக் குழு தலைவர் பக்கிரிசாமி, தொமுச பேரவை செயலாளர் வீர ராமச்சந்திரன், முன்னாள் நகர செயலாளர் புகழேந்தி, என்எல்சி தொமுச தலைவர் திருமாவளவன், பொதுச் செயலாளர் பாரி, என்எல்சி தொழிற்சங்கத்தினர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Ambedkar Memorial Day ,Cuddalore District ,
× RELATED கடலூர் மாவட்டம் ராமாபுரம் ஊராட்சியில் பெண் அடித்துக் கொலை!!