பாவூர்சத்திரம், டிச. 8: பாவூர்சத்திரம் அருகே பெத்தநாடார்பட்டி ஊராட்சி செல்லத்தாயார்புரத்தைச் சேர்ந்த விவசாயி அருள்ராஜ் (31), கடந்த 4ம் தேதி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். இவருக்கு மேரிசெல்வா என்ற மனைவியும், பொன்திலீப் (4), பொன்ஹெலினா (4 மாதம்) என 2 குழந்தைகளும் உள்ளனர். தகவலறிந்த தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவபத்மநாதன், குடும்பத்தினரை நேரில் சந்தித்து, மாவட்ட திமுக சார்பில் ரூ.25 ஆயிரம் நிதியுதவி வழங்கினார். மேலும் அவரது மனைவிக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை கிடைக்க ஏற்பாடு செய்வதாகவும் உறுதியளித்தார். அப்போது ஒன்றிய திமுக செயலாளர்கள் சிவன்பாண்டியன், சீனித்துரை, மாவட்ட இளைஞரணி சரவணன், பேரூர் பொருளாளர் பொன்செல்வன், பெத்தநாடார்பட்டி ஊராட்சி தலைவர் ஜெயராணி கலைச்செல்வன், நிர்வாகிகள் அருள், டால்டன், ஆசீர்ராஜன், ஆல்பின்ராய், பொருள்செல்வன், அந்தோணிராஜ், பால்ராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.