×

சங்கரன்கோவிலில் மாயமான மனநலம் பாதித்த பெண் கிணற்றில் சடலமாக மீட்பு

சங்கரன்கோவில், டிச. 8:  சங்கரன்கோவில் கக்கன் நகர் 6ம் தெருவை சேர்ந்த பரமசிவன் மகள் சுகந்தரி (35). மனநலம் பாதிக்கப்பட்ட சுகந்தரி கணவனை பிரிந்து தந்தை வீட்டில் வசித்து வந்தார்.  கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு மாயமானவர், நேற்று காலை அருகிலுள்ள கிணற்றில் சடலமாக கிடந்தார். தகவலறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர் விஜயன் தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று உடலை மீட்டனர். சங்கரன்கோவில் டவுன் எஸ்ஐ ஜெயக்குமார் மற்றும் போலீசார, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Tags : Sankarankoil ,
× RELATED சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில்...