×

வழிப்பறியில் ஈடுபட்ட 2 ரவுடிகள் கைது

தூத்துக்குடி, டிச.8:தூத்துக்குடி தென்பாகம் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன் தலைமையில் எஸ்ஐ உதயலட்சுமி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பிரையன்ட் நகர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த தூத்துக்குடி அமுதா நகரைச் சேர்ந்த ரஞ்சித்குமார் (27), பேச்சிமுத்து (26) ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து தகராறு செய்து, கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதையடுத்து ரஞ்சித்குமாரையும், பேச்சிமுத்துவையும் போலீசார் கைது செய்தனர். ரஞ்சித்குமார் மீது ஏற்கனவே தூத்துக்குடி தென்பாகம் போலீசில் போக்சோ, கொலை முயற்சி, கொலை மிரட்டல் வழக்குகள் உள்பட 10 வழக்குகள் உள்ளன.

Tags :
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு