×

அமைச்சர் மெய்யநாதன் தகவல் மௌண்ட் சீயோன் பள்ளிகளின் ஒருங்கிணைந்த திருச்சபைகளின் கிறிஸ்துமஸ் கீதஆராதனை நிகழ்ச்சி

புதுக்கோட்டை, டிச.8: புதுக்கோட்டை, மௌண்ட் சீயோன் இண்டர்நேஷனல் (சிபிஎஸ்இ) பள்ளியில் ஒருங்கிணைந்த திருச்சபைகளின் கிறிஸ்துமஸ் கீத ஆராதனை நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் பல்வேறு திருச்சபைகளிலிருந்து திரளானோர் கலந்து கொண்டனர். போதகர் சாம்கிருபாகரனின் இறைவழிபாடு மற்றும் கிறிஸ்துமஸ் பாடலோடு நிகழ்ச்சி இனிதே துவங்கியது. மௌண்ட் சீயோன் பள்ளிகளின் தலைவர் டாக்டர் ஜெ.ஜோனத்தன் சிறப்பு விருந்தினரான சகோதரர் ஜாபேஸ் ஜிக்கோ மற்றும் போதகர் சகாயராஜ் ஆகியோரை வரவேற்றார். மௌண்ட் சீயோன் பள்ளிகளின் துணைத்தலைவர் ஏஞ்சலின் ஜோனத்தன் நிகழ்ச்சிக்கு வந்திருந்த பல்வேறு ஊழியங்களின் தலைவர்கள் மற்றும் போதகர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கினார். போதகர் சகாயராஜ் அவர்களால் விவிலியத்திலிருந்து இறைவார்த்தை வாசிக்கப்பட்டது.

சிறப்பு விருந்தினர் தமது சிறப்புரையில் தேவனை நேசிக்கும்போது தீமையைவிட்டு விலகவேண்டும், இறைவனை சேவிக்கவேண்டும், வேதத்தை ஆராய்ந்து பார்க்க வேண்டும், சத்தியத்தின் மீது அன்புவைக்க வேண்டும், சோதனைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் உள்ளிட்ட 5 காரியங்களைக் குறித்தும், கிறிஸ்து பிறப்பைக் கொண்டாடுவதன் நோக்கத்தைக் குறித்தும் எடுத்துரைத்தார். நிறைவாக போதகர்அல்போன்ஸ் நன்றியுரை ஆற்றினார். மேரிஜெசி இறைவழிபாட்டை நிறைவுசெய்து, இறைஆசி வழங்கினார். நிகழ்ச்சியானது கிறிஸ்துமஸ் தாத்தா வருகையுடன், பாடல் பாடி நிறைவுபெற்றது.

Tags : Minister Meyyanathan ,Christmas ,Churches ,Mount Zion Schools ,
× RELATED தேசிய திருநங்கையர் தினம்: முதல்வர் வாழ்த்து