தோகைமலை, டிச. 8: கரூர் மாவட்டம் தோகைமலை அருகே கழுகூர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமணி மகன் கதிர்வேல்(26). சமையல் மாஸ்டராக வேலை செய்து வருகிறார். இவருக்கும் இவரது உறவினர் தோகைமலை பகுதியை சேர்ந்த தீபா(25) என்பவருக்கும் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் தனது தாய்வீடான தோகைமலைக்கு சென்று வருவதாக தெரிவித்து விட்டு தீபா சென்று உள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் 30ம் தேதி அன்று தாய் வீட்டில் இருந்த தீபா திடீர் என்று மாயமாகி உள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த கதிர்வேல் உறவினர்கள் வீடுகள் உள்பட பல்வேறு பகுதிகளில் தேடிபார்த்தும் தீபா கிடைக்கவில்லை என்று தெரிகிறது. இது குறித்து கதிர்வேல் தோகைமலை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மாயமான தீபாவை தேடி வருகின்றனர்.
கத்திரிக்காய் ரூ.80
வெண்டைக்காய் 70
தக்காளி 80
புடலங்காய் 50
பீர்க்கங்காய் 75
அவரைக்காய் 80
பாகற்காய் 65
கொத்தவரங்காய் 40
முள்ளங்கி 40
பரங்கிக்காய் 15
முருங்கைக்காய் 70
வாழைக்காய் 26
வெங்காயம் 45
வெங்காயம் பெல்லாரி 52
பச்சைமிளகாய் ரூ.30
கொத்தமல்லி 55
புதினா 40
சேனைக்கிழங்கு 30
கருணைகிழங்கு 50
சேப்பங்கிழங்கு 40
எலுமிச்சைபழம் 70
பூவன் பழம் 40
ரஸ்தாளி 50
கேரட் 58
முட்டைகோஸ் 30
பீட்ருட் 50
உருளைக்கிழங்கு 40
இஞ்சி 50
பெட்ரோல் லிட்டர்: ரூ.101.70
1 கிராம் .... ரூ.4,620
1 பவுன் .... ரூ.36,960
டீசல் லிட்டர்: ரூ.91.76