×

அம்மாபேட்டையில் பைக் திருடிய 2 பேர் கைது

தஞ்சை, டிச.8: திருவாரூர் மாவட்டம் வலங்கைமான், விளத்தூர் பகுதியை சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவரது மகன் மணிகண்டன் (25). இவர் தனது பைக்கில் கடந்த 4ம் தேதி அம்மாப்பேட்டைக்கு வந்துள்ளார். பின்னர் அம்மாப்பேட்டை சந்தை பகுதியில் தனது பைக்கை நிறுத்திவிட்டு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது பைக்கை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து மணிகண்டன் அம்மாப்பேட்டை போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். இதில் மகிமாலை பகுதி மேற்கு தெருவை சேர்ந்த 18 வயதுடைய வாலிபர், அருந்தவபுரம் தோப்புத்தெரு ராஜேந்திரன் மகன் ராஜ்குமார் (28) ஆகியோர் பைக்கை திருடியது தெரிய வந்தது. உடனே இருவரையும் அம்மாப்பேட்டை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Ammapettai ,
× RELATED 2026ம் ஆண்டு அரசியலுக்கு வருவேன் வண்டி...