×

பாபநாசம் அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

தஞ்சை,டிச.8: தஞ்சை மாவட்டம் பண்டாரவாடை ஆலிகுளம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் கலியமூர்த்தி (65). இவரது மகள் ஜெயசுதா (27). இவருக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்படுமாம். இதனால் மனமுடைந்த ஜெயசுதா தங்கள் வீட்டில் சம்பவத்தன்று தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கலியமூர்த்தி பாபநாசம் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் அழகம்மாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜெயசுதா உடலை மீட்டு பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags : Papanasam ,
× RELATED அதிமுக வேட்பாளரை தடுத்துநிறுத்தி கரும்புவிவசாயிகள் வாக்குவாதம்..!!