×

முத்துப்பேட்டை கோரையாற்றில் மிதந்த மூதாட்டி சடலம் மீட்பு

முத்துப்பேட்டை,டிச.7: முத்துப்பேட்டை ஆசாத்நகர் கோரையாறு பாலம் அருகே ஆற்றில் சுமார் 70வயது மதிக்கக தக்க மூதாட்டி சடலம் ஒன்று மிதந்தது. இதனை அப்பகுதியில் சென்றவர்கள் பார்த்து முத்துப்பேட்டை போலீசாருக்கு தகவல் அளித்தனர். மேலும் அப்பகுதியில் நூற்றுக்கணக்கானோர் கூடினர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த எஸ் பாலசுப்பிரமணியன் மற்றும் போலீசார் ஆற்றிலிருந்து மீனவர்கள் உதவியுடன் மூதாட்டியின் சடலத்தை மீட்டு அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரணை நடத்தினர். இந்நிலையில் முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை வடகாடு பசுமை நகரை சேர்ந்த பாலையன் மனைவி சுந்தரம்மாள் என்ற 70வயது மூதாட்டி இரண்டு நாட்களுக்கு முன்பு காணமல் போய் உள்ளார். இது குறித்து போலீசாரிடம் புகார் ஏதும் வராத நிலையில் இந்த மூதாட்டிதான் இறந்து கிடந்ததா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Muthupet river ,
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு