×

குமார் (எ) ராஜ்குமார், சரவணன் திருவாரூர் மாவட்ட தொழில்மையத்தில் காலியாக உள்ள ஓட்டுனர் பணியிடத்திற்கு தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்

திருவாரூர், டிச. 7: திருவாரூர் மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் காலியாக இருந்துவரும் ஒரு ஓட்டுநர் பணியிடத்திற்கு தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, திருவாருர் மாவட்ட தொழில்; மையத்தில் காலியாக உள்ள ஓட்டுனர் பதவி பொதுப் போட்டி முன்னுரிமையற்றவர் ஒரு பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரும் 24ம்தேதி பிற்பகல் 5.45 மணி வரை வரவேற்கப்படுகின்றன. கொரோனா பெருந்தொற்று காரணமாக் அரசு பணிகளில் நேரடி நியமனம் முலம் பணி நியமனம் செய்யப்படுவதற்கான வயது உச்சவரம்பினை தமிழக அரசு 2 ஆண்டுகள் உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளதது.

அதன்படி 13-09-2021 அன்று 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். அதிகபட்ச வயது பொதுப் பிரிவினருக்கு 32 வயதுக்குள்ளும், பிற்பட்ட மிகவும் பிற்பட்ட வகுப்பினருக்கு 34 வயதுகுள்ளும், தாழ்த்தப்பட்ட ம்ற்றும் பழங்குடியினருக்கு 37 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி உச்ச வயது வரம்பில் தளர்வு உண்டு. மேலும் கல்வித்தகுதியாக 8ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், இலகுரக மோட்டார் வாகனங்களை இயக்குவதற்கான உரிமம் மற்றும் ஓட்டுநர் பணியில் குறைந்தது 2 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

மேற்காணும் தகுதியுடையவர்கள் தங்களின் விண்ணப்பத்தினை வெள்ளைத் தாளில் எழுதி பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படத்துடன் பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், பெருந்திட்ட வளாகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருவாரூர் 610 004 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இப்பதவிக்கு முன்னரே விண்ணப்பித்துள்ளவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை. விண்ணப்பதாரர்கள் தங்களது கல்வித்தகுதி, சாதி மற்றும் வயதுக்கான சான்றிதழ், ஓட்டுநர் உரிமம் மற்றும் முன் அனுபவ சான்றிதழ்களின் நகல்களில் சுய சான்றொப்பமிட்டு விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். தேவையான சான்றிதழ்கள் இல்லாத விண்ணப்பங்களும், குறிப்பிட்ட காலக்கெடுவிற்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்களும் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள இயலாது.இவ்வாறு கலெக்டர் அதில் தெரிவித்துள்ளார்.

Tags : Kumar (A) Rajkumar ,Saravanan ,Thiruvarur District Industrial Estate ,
× RELATED வீட்டில் கஞ்சா விற்றவர் கைது