×

பொன்னமராவதி அருகே சிறுமியை கடத்தி திருமணம்: வாலிபர் போக்சோவில் கைது


பொன்னமராவதி, டிச.7: பொன்னமராவதி அருகே சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா செட்டியார் தெரு வடக்குவளவுவைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் தாமரைச்செல்வன்(29). இவர் புதுக்கோட்டை மாவட்டம் வார்பட்டு சின்னவார்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஒருவருடன் 8 ஆண்டுகளாக மாட்டு வியாபாரம் தொடர்பாக பழக்கத்தில் இருந்து வருகிறார். இந்த நிலையில் 7-8-2021 அன்று இரவு வார்பட்டு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது மாட்டு வியாபாரியின் 17 வயது மகளை எழுப்பி தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து கடத்திச் சென்று பிரான்மலை சிவன் கோயிலில் தாமரைச்செல்வன் திருமணம் செய்துள்ளார். இதனைத்தொடர்ந்து அந்த சிறுமியின் தந்தை பொன்னமராவதி காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளனர். இதனையடுத்து போலீசார் தொடர்ந்து தேடிவந்தும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நேற்று (6ம் தேதி) தகவல் கிடைக்கப்பெற்று திருப்பூரில் சிட்கோ என்ற இடத்தில் உள்ள மளிகை கடையில் இருந்தவர்களை அழைத்து வந்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு தாமரைச்செல்வனை போலீசார் கைதுசெய்துள்ளனர்.

Tags : Ponnamaravathi ,Valipar ,Pokcho ,
× RELATED பொன்னமராவதி முள்ளிப்பாடியில் ஜல்லிக்கட்டு 840 காளைகள் சீறிப்பாய்ந்தன