பாவூர்சத்திரம், டிச.7: கீழப்பாவூரில் அதிமுக சார்பில் ஜெயலலிதா நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. கட்சி அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா படத்திற்கு ஜெ.பேரவை தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்பியுமான பிரபாகரன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் பேரூர் செயலாளர் ஜெயராமன், பேச்சாளர் அப்பாதுரை, பாஸ்கர், சாமிநாதன், முருகன், கப்பல், இசக்கியம்மாள், கிருஷ்ணமூர்த்தி, வேல், முருகன், ராமச்சந்திரன், மணிகண்டன், கருப்பசாமி, நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.