தென்காசி, டிச. 7: அம்பேத்கரின் 65வது நினைவு தினத்தை முன்னிட்டு தென்காசியை அடுத்த நன்னகரத்தில் உள்ள அவரது சிலைக்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.மேலகரம் பேரூர் திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு பேரூர் செயலாளர் சுடலை தலைமை வகித்தார். தென்காசி கிழக்கு ஒன்றிய செயலாளர் குத்துக்கல்வலசை அழகுசுந்தரம் மாலை அணிவித்தார். மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் வக்கீல் வேலுச்சாமி, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் கிட்டு என்ற கிருஷ்ணன், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் ஜீவானந்தம், மாவட்ட பிரதிநிதி ரமேஷ்குமார், சுப்பிரமணியன், ஒன்றிய பிரதிநிதிகள் கல்யாணசுந்தரம், யாகவா சுந்தர், நன்னை பாலு, சுந்தர், இளைஞரணி அமைப்பாளர் கபிலன், விவசாய அணி அமைப்பாளர் பாலசுப்பிரமணியன், சந்திரன், வார்டு செயலாளர்கள் சிங்கத்துரை, பட்டமுத்து, முருகன், அருண், காசிவிசுவநாதன், ஆத்தியப்பன், கணேசன் முன்னாள் அறங்காவலர் வீரபாண்டியன், கௌதம், கணேசன், சங்கரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தென்காசி வட்டார காங்கிரஸ் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு வட்டாரத் தலைவர் பெருமாள் பேரூர் தலைவர் முருகேசன் தலைமை வகித்தார் பழனி நாடார் எம்எல்ஏ அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார். மாநில செயலாளர் ஆலங்குளம் செல்வராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ், மாவட்ட ஊராட்சி மன்ற துணைத் தலைவர் உதயகிருஷ்ணன், மாவட்ட பொது செயலாளர் காஜாமைதீன், மாவட்ட வர்த்தக காங்கிரஸ் துணைத்தலைவர் முகமது ரபி, ஆவின் பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் சுரேஷ், மாவட்ட அமைப்பு செயலாளர்கள் அகிலாண்டம், முருகன், வட்டார தலைவர் குற்றாலம்பெருமாள், புலிக்குட்டி, தேவேந்திரன், பிரபு, அரவிந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.தென்காசி மாவட்ட பா.ஜ. சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு தென்காசி தெற்கு ஒன்றிய தலைவர் முருகன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் மகேஸ்வரன் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் ராமராஜா மாலை அணிவித்தார். மாவட்ட பொதுச் செயலாளர் வழக்கறிஞர் முத்துலட்சுமி, மாவட்ட துணைத்தலைவர் முத்துக்குமார். மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் செந்தூர் பாண்டியன், பட்டியல் அணி மாவட்ட தலைவர் பால்ராஜ், பட்டியல் அணி மாவட்ட பொதுச்செயலாளர் ராமர்,
மாநில பொதுக்குழு உறுப்பினர் சீனிவாசன், ராணுவ அணி மாவட்ட செயலாளர் குமார், ஒன்றிய சிறுபான்மை அணித்தலைவர் அலெக்ஸ் தேவேந்திரன், சக்தி கேந்திர பொறுப்பாளர் சரவணன், சரவண குமார், சோடா மாரியப்பன், முருகன், வசந்த், பாரதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் டேனிஅருள் சிங் தலைமை வகித்து மாலை யில் அணிவித்தார். மாவட்ட துணை செயலாளர் சித்திக், ஒன்றிய செயலாளர்கள் பிரபாகர், சுரண்டை மணி, தமிழ்செல்வன், கவுன்சிலர் வீரச்சாமி, கார்த்திக், செல்லத்துரை, பாலசுப்பிரமணியன், ஜேக்கப், ஏசுராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். தமிழ் புலிகள் கட்சி சார்பில் தென்காசி மாவட்டம் நன்னகரம் தெற்கு மாவட்டச் செயலாளர் குற்றாலம் குமார், வடக்கு மாவட்டம் செயலாளர் கு.சந்திரசேகர், மாவட்ட வழக்கறிஞர் வள்ளுவசெல்வம், இசக்கிமுத்து, அருண்குமார், சிவா, நவீன்குமார் ஆகியோர் மாலை அணிவித்தனர். தென்காசி தெற்கு மாவட்ட மக்கள் தேசம் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் ராஜாராம், மாவட்ட துணை செயலாளர் ஆசிப் ராஜா, கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் சுரேஷ், மாவட்ட செய்தி தொடர்பாளர் கார்த்திக், செங்கோட்டை ஒன்றிய செயலாளர் சார்லஸ் மற்றும் நிர்வாகிகள் ராஜேஷ், மாரியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பூர்வீக மக்கள் விடுதலை கட்சி சார்பாக மாவட்ட செயலாளர் இசைவாணன், மாவட்ட செய்தி தொடர்பாளர் இளையராஜா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், மாநில பொது செயலாளர் முருகேசன் ஆகியோர் மாலை அணிவித்தனர். தென்காசி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் வீரன், இளைஞரணி செயலாளர் சண்முகம், மாணவரணி தலைவர் அமுதன், தமிழ்குமரன், வக்கீல் சாக்கரடீஸ், முத்து மணி ஆகியோர் மாலை அணிவித்தனர்.
தென்காசியில் தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் ஆலோசனையின் படி அம்பேத்கரின் 65ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் சாதிர் தலைமை வகித்தார். தென்காசி கிழக்கு ஒன்றிய செயலாளர் அழகுசுந்தரம், கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சீனித்துரை, கடையம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் வேலுச்சாமி முன்னிலை வகித்தனர். மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் ஆயான்நடராஜன், மேகநாதன், மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் டாக்டர் மாரிமுத்து, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் குற்றாலம் குட்டி, ஆழ்வார்குறிச்சி பேரூர் செயலாளர் பொன் சுந்தரம், அணி துணை அமைப்பாளர்கள் சாமித்துரை, ராஜேந்திரன், வக்கீல் முருகன், செல்வம், தங்கபாண்டியன், நகர நிர்வாகிகள் ஷேக் பரீத், பால்ராஜ், கலை பால்துரை, கஜேந்திரன், சிவனுபாண்டியன், வடகரை ராமர், ஆனந்தன், தர்மராஜன், வீட்டு வசதி சங்க தலைவர் சுரேஷ், ராமராஜ், ஹரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சங்கரன்கோவில்: அம்பேத்கரின் 65 வது நினைவு தினத்தை யொட்டி சங்கரன்கோவில் கௌரிசங்கர் தியேட்டர் சாலையில் உள்ள அவரது மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் நகர செயலாளர் சங்கரன், விசிக மாவட்ட செயலாளர் குழந்தை வளவன், நகரச்செயலாளர் திருமாசுந்தர், விசிக மாவட்ட சிறுபான்மை அணி செயலாளர் மைக்கேல், ஜோகின், ஆதித்தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் தென்னரசு,
திமுக மாவட்ட மாணவரணி துணைச் செயலாளர் கார்த்தி, அப்பாஸ் அலி, சங்கர்,ஜோஸ்வா, ஜெயக்குமார், பிரகாஷ், பாரதிராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் கேஎஸ்எஸ் மாரியப்பன் செய்திருந்தார். அதனை தொடர்ந்து சங்கரன்கோவில் எம்எல்ஏ அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் சிலைக்கு எம்எல்ஏ ராஜா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அம்பேத்காரின் 65வது நினைவு தினத்தை முன்னிட்டு அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் அறிவுறுத்தலின் படி கட்சியின் தேர்தல்பிரிவு செயலாளரும் தென் மண்டல பொறுப்பாளருமான மாணிக்கராஜா வழிகாட்டுதலின் பேரில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் அய்யாத்துரைப்பாண்டியன் சங்கரன்கோவில் ரயில்வே பீடர் ரோட்டில் அமைந்துள்ள மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் திரளானோர் கலந்துகொண்டனர்.
களக்காடு: அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு களக்காட்டில் திமுக சார்பில் அவரது சிலைக்கு வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வ கருணாநிதி தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. இதில் களக்காடு நகர பொறுப்பாளர் மணிசூரியன், களக்காடு ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஜின்னா, ஜார்ஜ் நகர இளைஞரணி துணை அமைப்பாளர் அருணாச்சலம் என்ற வெள்ளையன், செல்வகுமார், இசக்கிப்பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அமமுக சார்பில் ஒன்றிய செயலாளர் ராஜசேகர் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.