×

மீன்பிடிக்கும் போது கடலில் தவறி விழுந்து பலியான மணப்பாடு மீனவர் குடும்பத்திற்கு நிதியுதவி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்

உடன்குடி, டிச. 7:  உடன்குடி யூனியன், மணப்பாட்டைச்  சேர்ந்தவர் விஜயன் (44). இவரது மனைவி சார்லி (40). தம்பதிக்கு பிரதிஷன்,  பிவிஷா என இரு குழந்தைகள். கடந்த அக். 25ம் தேதி  தூத்துக்குடி துறைமுகம் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த விஜயன், திடீரென  கடலில் தவறி விழுந்து உயிரிழந்தார். தகவலறிந்த அமைச்சர்  அனிதா ராதாகிருஷ்ணன், விஜயன் வீட்டிற்கு நேரில் சென்று அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறியதோடு தனது சொந்த நிதியில் ரூ.1லட்சம் வழங்கினார். அப்போது திருச்செந்தூர் தாசில்தார்  சுவாமிநாதன், உடன்குடி ஆர்ஐ சொக்கலிங்கம், திமுக மாணவர் அணி  மாநில துணைச்செயலாளர் உமரிசங்கர், உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங்,  துணை சேர்மன் மீரா சிராசூதீன், உடன்குடி நகரச் செயலாளர் ஜான்பாஸ்கர், மாவட்ட  அமைப்பாளர்கள் இளைஞர் அணி ராமஜெயம், நெசவாளர் அணி மகாவிஷ்ணு, மாவட்ட துணை  அமைப்பாளர்கள் வர்த்தக அணி ரவிராஜா, இளங்கோ, மாணவர் அணி அமிர்தா மகேந்திரன்,  அலாவுதீன், ராஜாபிரபு, இளைஞர் அணி மணப்பாடு ஜெயப்பிரகாஷ், மீனவர் அணி மெராஜ்,  பயஸ், பொறியாளர் அணி ஜெஸ்பர், தாமஸ், லோபோ, செட்டியாபத்து பஞ்சாயத்து தலைவர்  பாலமுருகன், உடன்குடி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்க தலைவர்  அஸ்ஸாப் கல்லாசி, இளைஞர் அணி பாய்ஸ், நகர அமைப்பாளர் அஜய்,  ஒன்றிய கவுன்சிலர் லெபோரின், மணப்பாடு பஞ்சாயத்து துணைத்தலைவர் ஜொலிசன், தகவல்தொழில்நுட்ப அணி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன், எள்ளுவிளை  செயலாளர் மோகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்

Tags : Minister of Finance ,Anita Radhakrishnan ,
× RELATED பாஜக நிர்வாகிகளை விரட்டியடித்த குளச்சல் மீனவர்கள்