ஒரத்தநாடு,செப்.6: தஞ்சையிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் மெயின் ரோட்டில் ஒரத்தநாடு மைய பகுதியில் பைபாஸ் சாலையில் எழில்மிகு தோற்றத்துடன் முத்தமிழ் திருமண மண்டபம் அமைந்துள்ளது. அதிக அளவிலான வாகனங்களை நிறுத்தும் இடம். நவீன தொழில்நுட்பத்தால் சமையல் கலைஞர்களின் ஆலோசனையோடு சமையலறை, திருமண மாளிகை முழுவதும் குளிர்சாதன வசதி, நவீன மின் அரங்கம், 24 மணி நேரமும் சூழலும் கேமராக்கள். நவீன தொழில்நுட்ப ஒலிபெருக்கிகள், எந்த நேரத்திலும் பொதுமக்கள் வந்து செல்வதற்கு வசதியாக பஸ் போக்குவரத்து இருக்கும் இடம். புதிய தொழில்நுட்ப மேடை. இவைகள் இந்த திருமண மாளிகையின் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்த திருமண மாளிகை திறப்பு விழாவிற்கு தஞ்சை மாவட்ட திமுக பொறுப்பாளரும், திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன் தலைமை வகிக்கிறார். திருமண மாளிகை விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் இந்நாள் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள், அனைத்து கட்சி பிரமுகர்கள், மக்கள் பிரதிநிதிகள், அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். திருமண மாளிகை திறந்து வைத்து முதல் முதல்முதலாக திருமணம் செய்யும் ஏழை குடும்பத்தை சேர்ந்த மணமக்களுக்கு இலவச சீர் வரிசைகளுடன் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் திருமணத்தை நடத்தி வைக்கிறார். நவீன வசதிகள் கூடிய புதிய திருமண மாளிகை உருவாக்கிய இப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் அமைத்துள்ளதாக முத்தமிழ் அரங்கத்தில் உரிமையாளர் முத்தமிழ்செல்வன் தெரிவித்தார்.