×

அறந்தாங்கி அருகே பயங்கரம் மாஸ்க் அணிந்த மர்ம நபர்கள் கைவரிசை சர்வதேச தொண்டர்கள் தினவிழா

புதுக்கோட்டை, டிச. 6: இந்திய அரசு, புதுக்கோட்டை மாவட்ட நேரு யுவகேந்திரா சார்பில் சர்வதேச தொண்டர்கள் தினவிழா புதுக்கோட்டை தமிழ்நாடு அறிவியல் இயக்க கூட்ட மன்றத்தில் நடைபெற்றது. விழாவிற்கு புதுக்கோட்டை நேரு யுவ கேந்திரா மாவட்ட இளையோர் அலுவலர் ஜோயல் பிரபாகர் தலைமை ஏற்றார். புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் பல்வேறு சமூக சேவைகள் மற்றும் போட்டிகளில் பங்கேற்ற இளையோர் தொண்டர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

ஜெ.ஜெ கலைக்கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் தயாநிதி, நேரு யுவ கேந்திரா முன்னாள் ஒருங்கிணைப்பாளர் க.சதாசிவம், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் வீரமுத்து, மாமன்னர் கல்லூரி விரிவுரையாளர் சுசீந்திரன், தமிழ்நாடு காவல்துறையைச் சார்ந்த அப்பாவு, செல்வக்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவில் சமூக சேவையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ள நேரு யுவ கேந்திராவை சார்ந்த தொண்டர்கள் சுமார் 75 பேர் கலந்து கொண்டனர். அனைவரையும் நேரு யுவ கேந்தராவின் திட்ட உதவி அலுவலர் நமச்சிவாயம் வரவேற்றார். விழா ஏற்பாடுகளை நேரு யுவ கேந்திராவின் இளையோர் தொண்டர்கள் மணிமேகலை, ஹரிஹரன், ராஜ்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : International Volunteers Day ,Aranthangi ,
× RELATED அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் 68.80 சதவீதம் வாக்கு பதிவு