பொன்னமராவதி, டிச.6: இலுப்பூர் கல்வி மாவட்ட அளவில் நடைபெற்ற ஜவகர்லால் நேரு பிறந்த நாள் பேச்சுப்போட்டியில் பொன்னமராவதி பள்ளி மாணவர் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். பொன்னமராவதி அமல அன்னை மேல்நிலைப்பள்ளியின் 12ம் வகுப்பு மாணவன் கோபி இலுப்பூர் கல்வி கல்வி மாவட்ட அளவில் முதலிடம் பெற்று தனது பேச்சாற்றலை கொரோனா காலத்தின் இடைவெளிக்குப் பிறகும் நிலை நிறுத்தி பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார். இதனையடுத்து பள்ளியில் முதல்வர் மரியபுஸ்பம் பாராட்டி வாழ்த்தினார். கொரோனா காலம் தொடங்கும் முன்பு மாவட்ட, மாநில அளவில் நடைபெற்ற பேச்சுப்போட்டியில் முதலிடம் பெற்று இன்றைய தமிழக முதல்வரிடம் ரொக்கப் பரிசு பெற்ற மாணவன் கோபி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவில் துணைமுதல்வர் பிரின்ஸ், ஆசிரியர்கள் பாலமுரள், ஜீவா உட்பட பலர் கலந்து கொண்டனர்.