×

பேராவூரணி அருகே கோமாரி நோய் தாக்கி பசுமாடு சாவு

பேராவூரணி,டிச.5: பேராவூரணி அருகே உள்ள சோழகனார்வயல் பகுதியை சேர்ந்தவர் பெரமையன் (60), தச்சுத்தொழிலாளி. இவரது மனைவி சுசீலா (55). பசுமாடு ஒன்றை வளர்த்து வந்தார். இதில் பால் விற்று அதன் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு குடும்பம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக கோமாரி நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்ட இவர்களது பசுமாடு, பரிதாபமாக செத்தது. வாழ்வாதாரத்தை காப்பாற்றி வந்த பசுமாடு உயிரிழந்ததால், சுசீலா கதறி அழுதார். இதுகுறித்து வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கால்நடை மருத்துவர் பிரகாஷ், மற்றும் வருவாய் துறையினர், இறந்த பசுமாட்டை ஆய்வு செய்தனர்.

Tags : Peravurani ,
× RELATED மல்லிப்பட்டினம் சேதுபாவாசத்திரம்...