×

கோட்டைப்பட்டினத்தில் மீன் ஏலக்கூடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

அறந்தாங்கி, டிச.5: புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் புதுக்குடி கிராமத்தில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வசிக்கின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு மீன்களை ஏலம் விடுவதற்கு போதுமான இடவசதி இல்லாமல் இருந்து வந்தனர். மற்றும் வலை பின்னுவதற்கு போதுமான இடவசதி இல்லாமல் இருந்தது. இந்நிலையில் தமிழக அரசு இப்பகுதியில் மீன் ஏலக்கூடம் மற்றும் வலை பின்னும் கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கியது. அதனடிப்படையில் சுமார் 1 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டுவிழா நேற்று நடைபெற்றது. விழாவில் அறந்தாங்கி எம்எல்ஏ ராமச்சந்திரன், மணமேல்குடி ஒன்றியக்குழு துணைத்தலைவர் சீனியார், கோட்டைப்பட்டினம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அக்பர்அலி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Kottaipattinam ,
× RELATED இலங்கை கடற்படை சிறைபிடித்த கோட்டைப்பட்டினம் மீனவர்கள் விடுதலை