×

500 பேருக்கு பணிநியமன ஆணை அமைச்சர் ரகுபதி வழங்கினார் டிரைவர் தற்கொலை முயற்சி

புதுக்கோட்டை, டிச.5: புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வரின் காரின் டிரைவராக சுமார் 15 ஆண்டுகள் பணியாற்றி வந்தவர் சாமிநாதன் (55). இவரது நடவடிக்கைகள் சரியில்லாததால் அவரை வேறு பணிக்கு முதல்வர் பூவதி மாற்றியுள்ளார். இந்த நிலையில், நேற்று மாலை டிரைவர் சாமிநாதன் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அருகில் இருந்தவர்கள் அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கணேஷ்நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Minister ,Raghupathi ,
× RELATED பொன்முடி அமைச்சராக தகுதி உடையவர்...