×

லாரி மோதி கூலி தொழிலாளி பலி

கந்தர்வகோட்டை, டிச.5: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள மங்கனூர் கிராமத்தை சேர்ந்த பிச்சைவேல் மகன் உருமையா (32). கூலி தொழிலாவி. இவர் நேற்று மாலை கந்தர்வகோட்டையில் இருந்து தனது டூவீலரில் மங்கனூருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, திருச்சியில் கந்தர்வகோட்டை நோக்கி வந்து கொண்டிருந்த, பார்சல் ஏற்றி வந்த லாரி வடுகப்பட்டி சாலை அருகே வந்தபோது, டூவீலரில் பயங்கரமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே உருமையா பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த கந்தர்வகோட்டை இன்ஸ்பெக்டர் செந்தில்மாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உருமையா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து மாயமான லாரி டிரைவரை தேடி வருகின்றனர். இறந்த உருமையாவுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Larry ,
× RELATED திருவனந்தபுரம் அருகே சாலையில்...