×

தா.பழூர் அருகே அனுமதியின்றி மது விற்றவர் கைது

தா.பழூர், டிச.5: அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியத்திற்குட்பட்ட விக்கிரமங்கலம் அருகே உள்ள செங்குழி பகுதியில் விக்கிரமங்கலம் எஸ்ஐ லோகநாதன் தலைமையிலான காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பதுக்கி வைத்து மது விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர். செங்குழி கிராமம் நடுத்தெருவை சேர்ந்த சிற்றரசன் (50) என்பவரது வீட்டில் சோதனை நடத்தினர். இதில் அரசு அனுமதி இன்றி அவரது வீட்டின் பின்புறம் விற்பனை செய்வதற்காக மறைத்து வைத்திருந்த 309 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த சிற்றரசனை கைது செய்து வழக்கு பதிந்து ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Dhaka ,
× RELATED வங்கதேசத்துக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றதாக சேலையூர் எஸ்.ஐ. கைது!!