×

சாயர்புரம், திருப்பணிசெட்டிகுளத்தில் பட்டா மாற்றம் சிறப்பு முகாம்

ஏரல், டிச.5:  சாயர்புரம், திருப்பணிசெட்டிகுளத்தில் நடந்த சிறப்பு முகாமில் ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ பயனாளிகளுக்கு பட்டா வழங்கினார். சாயர்புரம் விஏஒ அலுவலகம், திருப்பணிசெட்டிகுளம் பஞ்சாயத்து பகுதியில் பட்டா வழங்கும் சிறப்பு முகாம் நடந்தது. ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ பங்கேற்று பயனாளிகளுக்கு பட்டா வழங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். தொடர்ந்து அவர் சாயர்புரத்தில் உள்ள அங்கன்வாடி பள்ளி, திருப்பணிசெட்டிகுளம் சமுதாய நலக்கூடம், யூனியன் பள்ளி ஆகியவற்றை பார்வையிட்டார். திருப்பணிசெட்டிகுளத்தில் மாரடைப்பால் உயிரிழந்த டிரைவர் செல்வகுமார் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி அவரது மனைவி சேர்மகனியிடம் ரூ.10 ஆயிரம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சிகளில் ஏரல் மண்டல துணை தாசில்தார் பொன்னுலட்சுமி, ஆர்ஐ விஜய்ஆனந்த், விஏஓக்கள் இம்மானுவேல், முத்துராஜ், முத்துசெல்வி, சாயர்புரம் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பண்டாரம், பஞ்சாயத்து தலைவர்கள் திருப்பணிசெட்டிகுளம் சுயம்புலிங்கம், நட்டாத்தி சுதாகலா, தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் சங்கர், பொருளாளர் எடிசன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜெயசீலன்துரை, துணைத்தலைவர் இசைசங்கர், மாவட்ட துணைத்தலைவர் பிரவீணா, வைகுண்டம் வட்டார தலைவர்கள் வடக்கு சொரிமுத்துபிரதாபன், மேற்கு நல்லகண்ணு, சாயர்புரம் நகர தலைவர் ஜேக்கப், திமுக மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளார் ராயப்பன், வைகுண்டம் ஒன்றிய செயலாளர் பிஜி ரவி, சாயர்புரம் பேரூராட்சி முன்னாள் தலைவர் பொன்சேகர் உட்பட பலர் பங்கேற்றனர்

Tags : Sayarpuram ,Thiruppanichettikulam ,
× RELATED சிவத்தையாபுரத்தில் திமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்