×

மானாமதுரை மேலநெட்டூரில் கண்மாய் தண்ணீர் பாசனத்திற்கு திறப்பு

மானாமதுரை, டிச. 5: மானாமதுரை அருகேயுள்ளது மேலநெட்டூர். இங்குள்ள கண்மாய் தண்ணீரை பாசனத்திற்கு திறக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று பாசனத்திற்காக மேலநெட்டூர் கண்மாய் திறக்கப்பட்டது. எம்எல்ஏ தமிழரசி கண்மாய் மதகை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மானாமதுரை ஒன்றிய துணை தலைவர் முத்துச்சாமி, திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாமணி, மாவட்ட பிரதிநிதி காளியப்பன், நிர்வாகி அய்யாச்சாமி, மற்றும் பொதுப்பணித்துறை ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Kanmai ,Manamadurai Melanettoor ,
× RELATED திருப்புத்தூர் அருகே கண்மாயில்...