ராமநாதபுரம், டிச. 5: தமிழ்நாடு எறிபந்து கழக துணை தலைவர் ஜெயசிங் தெரிவித்ததாவது: ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் 9வது சீனியர் மாநில அளவிலான எறிபந்து போட்டி டிச.0 முதல் டிச.2 வரை நடைபெற உள்ளது. இப்போட்டியில் ஆடவர், மகளிர் என சீனியர் வீரர்கள் கலந்து கொள்கின்றனர். ராமநாதபுரம் மாவட்ட எறிபந்து கழகம் சார்பில் மாநில போட்டியில் கலந்து கொள்ள வீரர், வீராங்கனையர் தேர்வு வேலுமாணிக்கம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் டிச.6 காலை 8.30 மணியளவில் நடைபெற உள்ளது. வீரர் தேர்வில் பங்கேற்க வருவோர், தமிழக அரசின் வழிகாட்டல் படி கொரோனா தடுப்பூசி செலுத்தியமைக்கு சான்று கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.