×

5ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஜெயலலிதா படத்துக்கு மரியாதை செலுத்த வேண்டும் கடம்பூர் ராஜூ எம்எல்ஏ, சண்முகநாதன் அறிக்கை

தூத்துக்குடி, டிச.4: ஜெயலலிதாவின் 5ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு, தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் அஞ்சலி செலுத்திட  மாவட்ட செயலாளர்கள் கடம்பூர் ராஜூ, சண்முகநாதன் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுகுறித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூ எம்எல்ஏ, தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 5ம் ஆண்டு நினைவு தினம் நாளை (5ம்தேதி) அனுசரிக்கப்படுகிறது. அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆணைக்கிணங்க அன்றைய தினம் காலை 9 மணியளவில் தூத்துக்குடி வடக்கு, தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர்கள் தலைமையில் தூத்துக்குடி, கோவில்பட்டியில் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதாவின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்படுகிறது.

இதில் தலைமை, மாவட்ட நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர். நிகழ்ச்சியில் மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூராட்சி, ஊராட்சி, வட்ட கிளை நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், கூட்டுறவு மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், தொண்டர்கள் பங்கேற்க கேட்டுக் கொள்கிறோம். மேலும், நிர்வாகிகள் அவரவர் பகுதிகளில் ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்த கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

Tags : Kadampur Raju ,Shanmuganathan ,Jayalalithaa ,
× RELATED ஜெயலலிதாவுக்கு சொந்தமான நகைகளை...