×

நெல்லையில் குண்டாசில் ஒருவர் கைது

நெல்லை, டிச. 4: நெல்லை சந்திப்பு பகுதியில் கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்டவரை குண்டர் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். நெல்லை டவுன் வயல் தெரு முத்துராமலிங்கபுரத்தைச் சேர்ந்த பாண்டி மகன் முத்தையா (40). இவர் நெல்லை சந்திப்பு பகுதியில் கொலை முயற்சி, பொதுமக்களை அச்சுறுத்துதல் போன்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டு பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தார்.

இதையடுத்து நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் (கிழக்கு) டி.பி.சுரேஷ்குமார், நெல்லை உதவி கமிஷனர் அண்ணாதுரை, சந்திப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் ஆகியோர் பரிந்துரையின் பேரில், நெல்லை  மாநகர போலீஸ் கமிஷனர் செந்தாமரை கண்ணன் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் முத்தையாவை கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து முத்தையா பாளை. மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags : Kundas ,Nellai ,
× RELATED நெல்லை மக்களவை தொகுதி பாஜ, அதிமுக வேட்பாளர்கள் சொத்து பட்டியல்