×

கல்லூரி புத்தக கண்காட்சி

தேனி, டிச. 4: தேனி அருகே வடபுதுப்பட்டியில் உள்ள தேனி நாடார் சரசுவதி கலை, அறிவியல் கல்லூரியில் புத்தக கண்காட்சி மற்றும் துறைகளுக்கிடையேயான போட்டிகள் நடந்தது. கல்லூரி செயலாளர் காளிராஜ், இணை செயலாளர்கள் சுப்புராஜ், வன்னியராஜன், கல்லூரி முதல்வர் சித்ரா ஆகியோர் புத்க கண்காட்சியை திறந்து வைத்தனர். கல்லூரியில் உள்ள பல்வேறுத் துறைகளுக்கிடையே ஆங்கில அகராதியில் சொற்களை கண்டுபிடித்தல், நூலாசிரியர்களை கண்டுபிடித்தல்,  புத்தகங்களை கண்டுபிடித்தல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் வெற்றி பெற்ற  24 மாணவியர்களுக்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை தலைவர் முருகன், பொதுச்செயலாளர் ராஜ்மோகன், பொருளாளர் பழனியப்பன் பரிசுகளை வழங்கினர்.

Tags :
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...