தொண்டி, டிச.4: திருவாடானை அருகே டி.நாகனி கிராமத்தில் வருவாய் கோட்டாட்சியர் சேக் மன்சூர் தலைமையில் கணினி பட்டா திருத்த முகாம் நடைபெற்றது. இம்முகாமில் 18 நபர்களுக்கு கணினி திருத்தம் தொடர்பான உத்தரவுகள் வழங்கப்பட்டது. வட்டாட்சியர் செந்தில்வேல் முருகன், துணை வட்டாட்சியர் சேதுராமன், வருவாய் ஆய்வாளர் மெய்யப்பன், தலைமை நில அளவர் காளிதாஸ், கிராம நிர்வாக அலுவலர்கள் ஊராட்சி மன்றத்தலைவர்கள் கலந்து கொண்டனர்.